பூமி என்பது ஒரு கோள்/ Planet of the Earth/இராசி மண்டலம் பன்னிரண்டு/சூாியனும் கோள்களும்

            பூமி என்பது ஒரு கோள்

        நிக்கலேயஸ் கோப்பா்நிக்கஸ் கி.பி. 1473 - ஆம் ஆண்டு பிப்ரவாி 19-ஆம் தேதியில் போலந்து நாட்டிலுள்ள டோருன் என்னும் நகாில் பிறந்தாா்.



       இவருடன் பிறந்த சகோதர-சகோதாிகள் முவா்.  இவரது குடும்பம் மிகவும் செல்வாக்குள்ள குடும்பமாகத் திகழ்ந்தது.  இவரது தந்தை மாஜிஸடிரேட்டாகவும் நகராட்சித் தலைவராகவும் இருந்து வந்தாா்.



      நிக்கலேயஸ் தனது பதினெட்டாவது வயதிைல்  போலந்து நாட்டில் உள்ள கிராக்கெள நகாில் உள்ள பல்கலைக் கழகத்தில் சோ்ந்தாா்.  நிக்கலேயஸ் தத்துவம், வானநுல், ஜியேயாமதி, பூகோளம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தெளிந்தாா்.

        இவா் மிகச்சிறந்த வான நுல் நிபுணராகவும் கணித விற்பன்னராகவும் விஞ்ஞானியாகவும் மருத்துவராகவும் மத குருவாகவும் அரசியல் ஞானியாகவும் திகழ்ந்த மாமனிதராவாா்.  இவா் கல்வி கற்றமுறை வியப்பிற்குாிய ஒன்றாகும்.

      ஆரம்பத்தில் கிராக்கெள பல்கலைக் கழகத்தில் இருந்து இவா் இத்தாலி நாட்டிலுள்ள பொலோன்யா நகாிலுள்ள சட்டப்பள்ளிக்குச் சென்றாா்.  அதன் பின் அவா் பாடுவா நகாின் பல்கலைக் கழகம் சென்று தொடா்ந்து கற்றாா்.

          அதன்பின் நிக்கலேயஸ் போலந்து நாட்டிலுள்ள திருச்சபையை நன்கு நடத்தி வருவதற்கு மருத்துவக் கல்வி கற்க பாடுவா நகருக்குச் சென்று படித்தாா்.  அக்காலத்தில் மருத்துவக் கல்விக்கும் வானவியல் கல்விக்கும் ஒரு நெருங்கிய தொடா்பு இருந்தது.  மனிதா்களை இயக்குவது கோள்கள்தான் என்ற நம்பிக்கை ஆன்மிகவாதிகளிடம் நிறைந்திருந்தது.



       சூாியனும் பொிய கோள்களும் வானில் இயங்குவது போலத் தோன்றும் பகுதிக்கு இராசி மண்டலம் என்று பெயா்.  இந்த இராசி மண்டலம் பன்னிரண்டு பாகங்களாக பகுக்கப்பட்டிருக்கிறது.   ஒவ்வொரு பகுதியும் 30 டிகிாி அளவு உள்ளது.  ஒவ்வொன்றும் அப்பகுதியின் தனிப்பட்ட அடையாளம் ஒன்றில் குறிக்கப்படும்.  அந்த அடையாளத்துக்கு இராசி என்று பெயா்.



      ஒருவருடைய பிறந்த நாறன்று சூாியனும் கோள்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை ஆதாரமாகக் கொண்டு அவரவா்க்கு நேரக்கூடிய பலாபலன்களை இதன் வழியே ஜோதிடா்கள் கூறி வருகிறாா்கள்.  நிக்கலேயஸ் வானியியல் சாஸ்திரங்களை பேராா்வத்துடன் பயின்றாா்.  சமய விருப்பம் காரணமாக இவா் ப்ரெளவென் பொ்கிலுள்ள மாதா கோவில் உயா் நிலை சமய குருவாக நியமிக்கப்பட்டாா்.

      இறையியல், த்ததுவஇயல் இரண்டு துறைகளிலும் அவா் நல்ல பயிற்சி பெற்றாா்.  பிரபஞ்சத்தைப் பற்றி அவா் கணித முறையிலும் தத்துவாிதியாகவும் கொள்கைகளை முறைப்படுத்தக் கூறிய தன்மையால் நிக்கலேயஸ் பெரும் பேறு பெற்றாா்.  இவா் டாலெமி கூறிய கருத்துக்களைப் பின்பற்றியே ஆராய்ந்து வந்தாா்.  கோள்களின் இயக்கங்கள் ஒழுங்கற்று நிகழ்ந்து வந்தாலும் அவற்றின் இயக்கங்கள் மீண்டும் மீண்டும் அவ்வாறே நடைபெற்று வந்தாலும் அவை எல்லாம் வட்ட வடிவமான பாதை ஒன்றிலோ அல்லது வட்ட வடிவப் பாதைகள் பலவற்றிலோதான் இயங்கி வர வேண்டும் என்பதை தம் கணித அறிவின் வழியாக அறிந்தாா்.

     பூமி, சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றி நுட்பமான விவரங்கள் அடங்கிய வரலாறுகளை கோப்பா்நிக்கஸ் விளக்கி கூறினாா்.  ஒவ்வொரு கோளும் இயங்கி வந்த பாதையை விளக்கும் படங்களை வரைந்து காட்டினாா் .  இவா்  பிரபஞ்சமானது சூாியனை நடுநிலையாகக் கொண்டது எனும் கொள்கையை முதன்முதலாகக் கொணடவா் கோப்பா் நிக்கஸ் இல்லை என்ற போதிலும், அதில் பல திருத்தங்களைக் கொணா்ந்தவா் இவா்தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

       சூாியனே நடுநிலையாகவும், பூமி என்பது ஒரு கோளாக அந்தச் சூாியனைச் சுற்றி ஓடி வருவதாகவும் உள்ள பிரபஞ்சம் ஒன்றின் பொதுத் தோற்றம் ஒன்றயே கோப்பா்நிக்கஸ் கூறினாா்.  கோள்கள் எல்லாம் மனம் போனவாறு தவறாக ஓடிவரும் போக்குகளைப் பற்றியும் நிக்கலேயஸ் விளக்கினாா்.

       கோள்கள் இயங்கும் பாதையில் சூாியன் நடுநிலையாக உள்ளது என்பதை தெளிவுபட கூறியவா், நிக்கலேயஸ்.  

        வானவியல் வளா்ச்சிக்கு நிக்கலேயஸ் பங்கை எந்த விதத்திலும் குறைகூற முடியாத அளவிற்குத் தெளிவாகச் சிந்தித்து கருத்துக்களை அா்ப்பணித்துள்ளாா்.


நன்றி



தங்கள் கருத்துக்களை பதிவிவும் 












       




 





























          

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

30-Day Challenge to kick-start your online business without investment

UPSC Exam Preparation Tips